நற்பிட்டிமுனை “MANS” சமூக சேவைகள்
அமைப்பின் “தாறுல் MANS” தலைமை அலுவலகம் திறப்பு விழா அமைப்பின் தலைவர்
எஸ். றுஸ்வின் தலைமையில் இன்று மாலை 4.00 மணியளவில் நற்பிட்டிமுனையில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்த
நிகழ்வுக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார், கிராமசேவை உத்தியோகத்தர்களான
ஏ.எம். பசால், யூ.எம்.பதியுத்தீன் , அமைப்பின்
தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார், செயலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ், பொருளாளர் எம்.எம்.
சில்மி, உபதவிசாளர் ஜெ.எம்.மிஹ்லார்,
ஸ்தாபத் தலைவர் எம்.ஐ.நிரோஸ், பிரதித் தலைவர்
ஜெ.எம்.அயாஸ் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment