Monday, October 20, 2014

பெரியநீலாவணை-01ல் நடைபெற்ற திவிநெகும கட்டம்-06






நேற்று 20.10.2014 பெரியநீலாவணை-01ல் நடைபெற்ற திவிநெகும கட்டம்-06 ஆரம்ப நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படங்கள்...

Tuesday, February 4, 2014

பிரதேசசெயலகம் கல்முனை தமிழ் பிரிவில் 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவில் பட்டதரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு  இன்று 2014.02.04 ம் திகதி பிரதேசசெயலகதின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுநிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமண்ற உறுப்பினர் திரு பி.எச். பியசேன, மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. விமலநாதன், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி திரு. வசந்த குமார, பிரதேச செயலாளா் திரு கே. லவநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளா் திரு பி. இராஜகுலேந்திரன் ஆகியோர் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தனர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டன






Friday, January 3, 2014

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் “திவிநெகும திணைக்களம்” திறப்பு




பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு ஏற்பாடு செய்த திவிநெகும திணைக்களம்திறப்பு நிகழ்வு இன்று (03.01.2013) ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பிரதேச செயலக அலுவலகத்தில் சமூர்த்தி முகாமையாளர் திரு. சிவம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திரு கே.லவநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. இராஜகுலேந்திரன் ஆகியோர் உரையாற்றுவதையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.





“MANS” சமூக சேவைகள் அமைப்பின் “தாறுல் MANS” தலைமை அலுவலகம் திறப்பு விழா

நற்பிட்டிமுனை MANS சமூக சேவைகள் அமைப்பின் தாறுல் MANSதலைமை அலுவலகம் திறப்பு விழா அமைப்பின் தலைவர் எஸ். றுஸ்வின் தலைமையில் இன்று மாலை 4.00 மணியளவில் நற்பிட்டிமுனையில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வுக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார், கிராமசேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். பசால், யூ.எம்.பதியுத்தீன் , அமைப்பின் தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார், செயலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ், பொருளாளர் எம்.எம். சில்மி, உபதவிசாளர் ஜெ.எம்.மிஹ்லார், ஸ்தாபத் தலைவர் எம்.ஐ.நிரோஸ்,  பிரதித் தலைவர் ஜெ.எம்.அயாஸ் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.