Monday, October 20, 2014

பெரியநீலாவணை-01ல் நடைபெற்ற திவிநெகும கட்டம்-06






நேற்று 20.10.2014 பெரியநீலாவணை-01ல் நடைபெற்ற திவிநெகும கட்டம்-06 ஆரம்ப நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படங்கள்...

Tuesday, February 4, 2014

பிரதேசசெயலகம் கல்முனை தமிழ் பிரிவில் 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவில் பட்டதரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு  இன்று 2014.02.04 ம் திகதி பிரதேசசெயலகதின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுநிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமண்ற உறுப்பினர் திரு பி.எச். பியசேன, மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. விமலநாதன், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி திரு. வசந்த குமார, பிரதேச செயலாளா் திரு கே. லவநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளா் திரு பி. இராஜகுலேந்திரன் ஆகியோர் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தனர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டன






Friday, January 3, 2014

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் “திவிநெகும திணைக்களம்” திறப்பு




பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு ஏற்பாடு செய்த திவிநெகும திணைக்களம்திறப்பு நிகழ்வு இன்று (03.01.2013) ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பிரதேச செயலக அலுவலகத்தில் சமூர்த்தி முகாமையாளர் திரு. சிவம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திரு கே.லவநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. இராஜகுலேந்திரன் ஆகியோர் உரையாற்றுவதையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.





“MANS” சமூக சேவைகள் அமைப்பின் “தாறுல் MANS” தலைமை அலுவலகம் திறப்பு விழா

நற்பிட்டிமுனை MANS சமூக சேவைகள் அமைப்பின் தாறுல் MANSதலைமை அலுவலகம் திறப்பு விழா அமைப்பின் தலைவர் எஸ். றுஸ்வின் தலைமையில் இன்று மாலை 4.00 மணியளவில் நற்பிட்டிமுனையில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வுக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார், கிராமசேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். பசால், யூ.எம்.பதியுத்தீன் , அமைப்பின் தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார், செயலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ், பொருளாளர் எம்.எம். சில்மி, உபதவிசாளர் ஜெ.எம்.மிஹ்லார், ஸ்தாபத் தலைவர் எம்.ஐ.நிரோஸ்,  பிரதித் தலைவர் ஜெ.எம்.அயாஸ் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.













Friday, December 27, 2013

மலசலகூட குழியை அகற்றுமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்


(சுப்னா)
கல்முனை இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூட குழியை அவ்விடத்தை விட்டு அகற்றுமாறு கோரி வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் இன்று காலை கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.




Thursday, December 19, 2013

இந்த வருடம் கடமையிலிருந்த வேளை 52 ஊடகவியலாளர்கள் படுகொலை

52 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் நிமித்தம் இந்த வரு­டத்தில் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்­காவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் கண்­கா­ணிப்பு அமைப்பு புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.
 
இந்த ஆண்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டமை தொடர்பில் இரண்­டா­வது மோச­மான ஆண்­டாக பதி­வே­டு­களில் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற போதும் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது படு­கொ­லை­களில் வீழ்ச்சி காணப்­ப­டு­வ­தாக நியூ­யோர்க்கை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாது­காப்பு சபை குறிப்­பிட்­டுள்­ளது.
 
மேலும் இந்த வரு­டத்தில் அதி­க­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மர­ணத்தை தழு­விய நாடுகள் வரி­சையில் தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டாக சிரியா முத­லி­டத்தில் உள்­ளது. அங்கு இந்த வருடம் 21 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணியின் நிமித்தம் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
 
சிரி­யா­வுக்கு அடுத்து அதி­க­ளவு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ள் மர­ணங்­களை எதிர்­கொண்ட நாடுகள் வரி­சையில் அடுத்­த­டுத்த இடங்­களில் எகிப்து, பாகிஸ்தான், சோமா­லியா, பிரேசில், ஈராக், மாலி, ரஷ்யா, துருக்கி, பங்­க­ளாதேஷ், கொலம்­பியா, பிலிப்பைன்ஸ், இந்­தியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உள்­ளன. 
 
எகிப்தில் 6 பேரும் பாகிஸ்­தானில் ஐவரும் சோமா­லி­யாவில் நால்­வரும், பிரேசில் மற்றும் ஈராக்கில் தலா மூவரும் மாலி மற்றும் ரஷ்­யாவில் தலா இரு­வரும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
 
அதே­ச­மயம் துருக்கி, பங்­க­ளாதேஷ், கொலம்­பியா, பிலிப்பைன்ஸ், இந்­தியா மற்றும் லிபியா ஆகிய நாடு­களில் தலா ஒரு ஊட­க­வி­ய­லாளர் வீதம் கொல்­லப்­பட்­டுள்ளனர்.
மேலும் சிரி­யாவில் சுமார் 30 ஊட­க­வி­ய­லா­ளர்கள் காணாமல் போயுள்­ளனர். ஊட­க­வி­ய­லா­ளர்கள் அதி­க­ளவில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட நாடாக தொடர்ந்து இரண்­டா­வது வரு­ட­மாக துருக்கி முத­லி­டத்தில் உள்­ளது. அதற்கு அடுத்­த­டுத்த இடங்­களில் ஈரானும் சீனாவும் உள்­ளன. இந்த ஆண்டில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட 211 ஊட­க­வி­ய­லா­ளர்­களில் அரைப்­ப­கு­திக்கும் அதி­க­மானோர் மேற்­படி நாடு­களில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஊடகவியலாளர்கள் தமது பணிக்காக சிறையிலடைக்கப்படுவது சமூகத்தை நசு க்கும் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டது என பாதுகாப்பு சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜோயல் சிமொன் தெரிவித்தார்.